வியாழன், 10 ஏப்ரல், 2014

இல்லாத பருப்பை கடைந்து...








இல்லாத பருப்பை கடைந்து 


  

கற்பனையில் நெய் ஊற்றி
சோறிட்டு பிசைந்து
பொம்மைகளுக்கும்
ஊரில் இருக்கும்
தாத்தா, பாட்டி
உறவுக்கெல்லாம் கொடுத்து
சலிப்பாக தானும் உண்டு
தாயின் வரவிற்கு
கிரில் கேட்டில் முகம்
புதைத்து காத்திருந்தது
நகரத்து குழந்தை...